மருத்துவமனையில் அனுமதி: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் நிலை என்ன? | TNNEWS

மருத்துவமனையில் அனுமதி: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் நிலை என்ன? | TNNEWS

தற்போது, அவரது இதயம் மற்றும் நுரையீரல் தொற்றுகள் காரணமாக, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வங்கதேசம் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக, நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றால் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, அவரது உடல்நலம் மேம்பட வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாளை (நவம்பர் 28) சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தவுள்ளனர்.

முன்னதாக, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு வீழ்ந்தபோது, கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி அந்நாட்டு அரசியலில் முன்னணி கட்சியாக உருவெடுத்தது.

மேலும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, வங்கதேசத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டிட்வா புயல்: இலங்கையில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம்! 20 பேர் பலி

முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *