சென்னை மற்றும் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! | TNNEWS

சென்னை மற்றும் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! | TNNEWS

வெளியிடப்பட்டது

தமிழகத்தில் மழை எச்சரிக்கை: முக்கிய தகவல்கள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பெரிய காலாப்பேட்டை பகுதியில் 250 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புதன்கிழமை காலை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் உள்ளது. இது வியாழக்கிழமை காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

மழை வாய்ப்பு

வியாழக்கிழமை முதல் அக். 28 வரை தமிழகத்தின் பல இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

சுவா் இடிந்து உயிரிழப்பு

சிதம்பரம்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர்மழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *